Sunday, February 28, 2010

கைபேசிகளுக்கான இலவச மென்பொருட்கள் தரவிறக்கம் செய்ய...

வணக்கம் ...

கைபேசிகளுக்கான மென்பொருட்களை இலவசமாக தரும் சில முன்னணி

இணையதளங்களை இங்கே கொடுத்துள்ளேன் . சிலவற்றில் உறுப்பினராக

வேண்டி இருக்கலாம் ... பயனுள்ள தளங்கள் .








www.mobitamilan.com

நண்பன் நசுருதீன் அவ்வப்போது குறுஞ்செய்தி மூலம் அறிமுகப்படுத்திய

தளங்கள் தான் இவை. பயன்படுத்தி பார்த்து சிறந்தவற்றை அளித்துள்ளேன் .

வருகைக்கு நன்றிகள்...

Tuesday, February 9, 2010

சிகரெட்






ஒரு நற்செய்தி :


1.தற்காலிக நினைவுத்திறனை அதிகரிக்கிறது .


2.மூளையின் தகவல் கையாளுமை வேகத்தை துரிதப்படுத்துகிறது .


3.விரைந்து முடிவெடுப்பவர்கள் புகைப்பழக்கம் உடையவர்களே .


4.உயர் இரத்த அழுத்தத்தை தற்காலிகமாக குறைத்து

சுவாசத்தை சீராக்குகிறது .


5.இன்றைய மேல்தட்டு வர்க்கத்தின் பெரும்பிரச்சினையான உடல்

பருமனை தடுக்கிறது .


6.O2-நுரையீரலின் மீதான டையாக்சைடின் பாதிப்பை எதிர்த்து

நிற்பதில் புகைப்பழக்கம் உடையவர்களது இரத்த சிவப்பணுக்கள்

சிறப்பாக செயல்புரிகின்றன .


7.பெரும்பாலான புகைப்பழக்கம் உடைய தாய்மார்களின்

குழந்தைகள் ஆஸ்துமா , அலர்ஜி போன்ற நோய்களுக்கு ஆளாவதில்லை .


8.பெண்களின் மார்பக புற்று நோய்க்கான வாய்ப்புக்களை குறைக்கிறது .


9.உயர் இரத்த அழுத்தத்தினால் மூளை நரம்புகள்

பாதிப்படைவதை தடுக்கிறது .


இதெல்லாம் எதோ ஹார்லிக்ஸ் , பூஸ்ட் சாப்டா வர்றது இல்ல பாஸ்.

விட்டமின் "C" அதாங்க சிகரெட் அடிக்கிறதால வர்ற பாசிடிவ் மேட்டர்ஸ் னு

நெட் ல போட்ருக்காங்க...


இங்க என்னான்னா சில பேர் அரசியல் பண்றதுக்காக

சிகரெட் டப்பால மண்டைய போடு ஓட்ட போடுன்றாங்கே.

எமனுக்கே பயப்படாத எங்கள் அஞ்சா நெஞ்சர்கள் கேவலம் இந்த

மண்டை ஓட்டுக்கும் , எச்சரிக்கை வாசகத்துக்குமா பயப்படுவாங்க ...



நான் ஏதோ சொல்ல வேண்டியத சொல்லிட்டேன் ... போய் ரிலாக்ஸா ஒரு தம்

போடறவங்க போடலாம் ...LETS ENJOY MACHI ...!


இல்ல எங்க ஆத்தா வையும்னு அழற UNDER 18 பசங்க மெயில் பண்ணுங்க,

குச்சி முட்டாயும் குருவி ரொட்டியும் சாப்டா வர்ற POSITIVE EFFECTS-அ

அடுத்த போஸ்ட் ல எழுதுறேன்...

அது வரைக்கும் ...

அண்ணே ஒரு கிங்க்ஸ்,PASSPASS...


Wednesday, February 3, 2010

கவிதை !



புருவமேட்டில் புதைத்து விட்டாள் என்னை!
விழிப்போரில் வென்றுவிட்ட
ஆணவத்தில்..!



உனக்கென்ன
கடந்துவிடுகிறாய்.!
நானல்லவா
இறந்துவிடுகிறேன்..!



மின்னலைத் தொடர ஆசைதான்
யார் தாங்குவது
இடியையும் மழையையும்!

Monday, February 1, 2010

முதன் முதலாய் ...


வணக்கம் ...

கூகிள்-ல விண்டோஸ் 7 பத்தி சர்ச் குடுத்தப்ப யாரோட கேட்ட நேரம்னு தெரில ,

அது ஒரு பிளாக்கர் எழுதின பதிவ காட்டி

படிச்சு பார்ரான்னு சொல்லிச்சு ... அதுல இம்ப்ரெஸ் ஆன உங்கள்

"தானைத்தலைவன்","மக்கள் தொண்டன் " அமிர்-ஆகிய நான் பல

வலைபதிவுகளையும் படிச்சு , சிரிச்சு , யோசிச்சு கடைசியா எடுத்த முடிவுதான்

இந்த சுயராஜ்ஜியம்... அதாவது அடுத்தவங்க ப்ளாக்க படிக்கிறது மட்டும் இல்லாம

நாமலே ஒரு ப்ளாக் எழுதி நாலு பேர சாவடிக்கிறது...


இதோட அடிப்படை என்னன்னா ,

நம்ம மும்தாஜ் சொன்னது தான்... அதாவது

"நால் பேர்க்கு நல்துனா, எதுமே தப்பில"


ஏதோ ஒரு ஆர்வத்தில் ப்ளாக் தொடங்கிவிட்டேன்... ஆனாலும் எழுதுவதற்கு

சரக்கு இருக்கிறது என்று ஒரு நம்பிக்கை(!>?>!)...

இனி உங்கள் பாடு...


அங்கே எகத்தாளமாக சிரிப்பவர்கள் பின்குறிப்பைக் கண்டு தங்கள்

பின்னூட்டங்களை பதிவு செய்யவும்...


பி.கு: எழுத சரக்கு இல்லாத சமயத்தில் கொஞ்சம் சரக்கு உள்ளே போய்விட்டால்

நாங்கல்லாம் சின்னக் கண்ணதாசன் என்பதை அண்ணன் அஞ்சா நெஞ்சன்

க(கொ)லைக்குழு சார்பில் நினைவூட்டிக் கொள்கிறோம் ...